Tuesday, 18 February 2014

மண் மணக்கிறது.

ஊட்டிக் கனி!

மண் மணக்குது ! மண் மணக்குது!
மழையும் பொழியப் போகுது!
பெண்  சிரிக்குது !பெண் சிரிக்குது!
பேச ஏதோ விழையுது!

கண் விரிக்குதுகண் விரிக்குது!
காதல் அங்கே பிறக்குது!
ஒளி தெரியுதுஒளி தெரியுது!
விழியில் காதல் மொழிகிறது!

பெண் வளருது! பெண் வளருது!
கண்ணில் என்னை வரையுது!
பண் மலருதுபண் மலருது!
பாட்டாய் என்னைப் பாடுது!

விண் கருக்குதுவிண் கருக்குது!
வேளை கூடி வருகுது!
தண்ணெடுக்குது !தண்ணெடுக்குது!
தாவி அணையத் துடிக்குது!

திண்ணெடுக்குதுதிண்ணெடுக்குது!
தேவியவள் வாசமே!
உண்ணழைக்குதுஉண்ணழைக்குது!
ஊட்டிக்கனி நேசமே!

கொ.பெ.பி.அய்யா.









No comments:

Post a Comment