சின்னஞ்சிறுக் கிளியே !
சின்னஞ்சிறுக் கிளியே !
செல்வக் களஞ்சியமே!
எண்ணப் பெருங்கொடையே!-என்றும்
இனிக்கும் தேனமுதே!(சின்ன)
உன்னைத் தீண்டையிலே
உள்ளம் குளிர்கிறதே!
என்னை நினைக்கையிலே!-கர்வம்
ஏறி வளர்கிறதே!(சின்ன)
அன்னை மடியினிலே!
ஆசை நிறைத்தவளே!
என்னை அவள் வடிவில்-வடித்து
உன்னைக் கொடுத்தவளே!(சின்ன)
தன்னை உணவாக்கி
அன்னை வளர்த்தாளே
உன்னில் என்னுயிரை-அவள்
ஊட்டி வடித்தாளே!(சின்ன)
முன்னைப் பெரியவர்கள்
உன்னில் தெரிகின்றர்.
இன்னை என் தோளில்—நீயோ
பின்னை எழுதுகிறாய்.(சின்ன)
பெண் நீ பிறப்பதற்கு
முன் தவம் இருந்ததற்கு
உன்னைப் பெற்றதற்கு-இறைவன்
உதவினான் வாழ்வதற்கு.(சின்ன)
பெண்ணின் பெருமைகளும்
உன்னில் அருமை சொலும்.
அன்னைத் தந்தையரும்—உன்னால்
அடைவோம் திருமைகளும்.(சின்ன)
உன்னைப் பெற்றதற்கும்
உலகம் எமைப் போற்றும்
பெண்ணை ஏற்றுதற்கும்—நீயும்
உன்னை ஈந்திடணும்(சின்ன)
முன்னை மடைமைகளை
முறித்து ஒழித்திடணும்.
பெண்மை உடையொளித்தும்-தமிழின்
பண்பைக் காத்திடணும்.(சின்ன)
கற்றும் உயர்ந்திடணும்.
காலம் வென்றிடணும்.
முற்றுந் தெளிந்திடணும்—வாழ்வில்
முதன்மை நின்றிடணும்.(சின்ன)
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment