வானமும் நாணுமோ!
"அச்சச்சோ..
அடிவானம் இப்படிச்
சிவந்து கிடக்குதே.
என்னாகிப் போச்சு.....
ஏனென்று கேட்டால்
கோணிக் குனிகிறது.
அப்படியே மாடியை
நோக்கினேன்.
அடடா இதுதான்
அதுவா?
அவள் அங்கே
சிக்கெடுக்கும் அழகைக்
கண்டுதான் நாணிச்
சிவந்தாயோ!....
சிரிக்கி!
No comments:
Post a Comment